சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகமெங்கும் வடகிழக்கு பருவமழை ஓய்ந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரி மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rain possibility in Tamilnadu and Puducherry.
தமிழகமெங்கும் வடகிழக்கு பருவமழை ஓய்ந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரி மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rain possibility in Tamilnadu and Puducherry.