ஆப்நகரம்

நாளை முதல் தமிழகத்தில் மழை குறையும்: வானிலை ஆய்வு மையம்...!

தமிழகத்தில் வரும் நாட்களில் படிப்படியாக மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN 18 Aug 2017, 12:39 pm
சென்னை: தமிழகத்தில் வரும் நாட்களில் படிப்படியாக மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil rain will reduce in the coming days says imd
நாளை முதல் தமிழகத்தில் மழை குறையும்: வானிலை ஆய்வு மையம்...!


குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சில பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டது. அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று குறிப்பிட்டார்.

தமிழகத்தில் சனி, ஞாயிறுக்கிழமைகளில் மழையின் அளவு குறையும் என்று கூறினார். சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் என்றார். வேலூர் மாவட்டம் சோளிங்கரில் அதிகபட்சமாக 8செ.மீ மழை பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.

Rain will reduce in the coming days says IMD.

அடுத்த செய்தி