ஆப்நகரம்

இரண்டு நாட்களுக்குக்கு கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

கடந்த சில நாட்களாக தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

Samayam Tamil 3 Nov 2018, 8:53 am
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Samayam Tamil 1540867902-1945


கடந்த சில நாட்களாக தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அடைமழை பெய்துவருகிறது. கடலூர், நெல்லிக்குப்பம்,பண்ருட்டி ஆகிய இடங்களில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. சிவகங்கை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பொழிந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அடுத்த செய்தி