ஆப்நகரம்

தமிழ்நாட்டுல இங்கெல்லாம் நாளைக்கு மழை பெய்யுமாம்!!

கோவை, தேனி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 12 Jun 2020, 7:18 pm
ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து நீடித்து வருகிறுது. இதன் காரணமாக, தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் வரும் 16 ஆம் தேதி வரை, மணிக்கு 50 -60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
Samayam Tamil rain


இதேபோன்று மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடகா, தெற்கு மகாராஷ்டிரா மற்றும் கோவா கடலோர பகுதிகளில் மணிக்கு 40 -50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும்.

மேலும் குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை ஒருசில நேரங்களில் 3 -3.4 மீட்டர் உயரத்துக்கு கடலலை எழக்கூடும். எனவே, குறிப்பிட்ட இந்த பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: வடதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!!

தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக கோவை, நீலகிரி, தேனி, தி்ண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோன்று, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும், புதுவையிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகரை பொருத்தவரை, வானம் வழக்கம்போல் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மிதான மழைக்கு வாய்ப்பு உண்டு எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை... எங்கெல்லாம் தெரியுமா?

கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் தேவலாவில் அதிகபட்சமாக 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆம்பூர், கூடலூர் பஜார் ஆகிய இடங்களில் தலா 4 சென்டிமீட்டர் மழையும் பெய்யதுள்ளது..

அடுத்த செய்தி