ஆப்நகரம்

தமிழக தலைமை தகவல் ஆணையராக பதவியேற்றார் ராஜகோபால் ஐஏஎஸ்

முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர் ஒருவர் என மூன்று பேர் அடங்கிய குழு, தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்து பரிந்துரை செய்யும்

Samayam Tamil 21 Nov 2019, 12:37 pm
சென்னை: தமிழக தலைமை தகவல் ஆணையராக தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ராஜகோபால் ஐஏஎஸ் பதவியேற்றுள்ளார்.
Samayam Tamil ஆர்.ராஜகோபால் ஐஏஎஸ்
ஆர்.ராஜகோபால் ஐஏஎஸ்


தமிழக தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருந்த இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரி ஷீலா பிரியா சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இதையடுத்து, காலியாக இருந்த தமிழக தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு தகுதியான நபரை பரிந்துரைக்கும் தேர்வுக்குழுக் கூட்டம் கடந்த 18ஆம் தேதி முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர் ஒருவர் என மூன்று பேர் அடங்கிய குழு, தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்து பரிந்துரை செய்யும். ஆனால், இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. புதிய ஆணையரை முடிவு செய்து விட்டு பெயரளவுக்கு கூட்டம் நடத்தப்பட்டதால் அதில் கலந்து கொள்ளவில்லை என ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

தேர்வுக்குழுக் கூட்டத்துக்கு பின்னர் புதிய ஆணையர் யார் என்பது ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மாநில தலைமை தகவல் ஆணையராக இந்திய ஆட்சிப்பணித்துறை அதிகாரி ஆர்.ராஜகோபாலை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தமிழக தலைமை தகவல் ஆணையராக பதவியேற்றார் ஆர்.ராஜகோபால் ஐஏஎஸ் பதவியேற்றுள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தர்.

மறைமுகத் தேர்தல் ஜனநாயகமானதுதான் - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் அடுத்த 3 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை இந்த பொறுப்பில் நீடிப்பார். ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ளதால், காலியாகியுள்ள தமிழக ஆளுநரின் செயலாளர் பதவிக்கு இண்டிய ஆட்சிப்பணித்துறை அதிகாரி ஆனந்த் ராவ் விஷ்ணு பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி