ஆப்நகரம்

தொழில் முனைவோருக்காக ஆளுநா் மாளிகை திறந்தே உள்ளது – பன்வாாிலால் புரோகித்

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான சூழல் நிலவுகிறது. தொழில் தொடங்குபவா்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் என்னை அணுகலாம் என்று ஆளுநா் பன்வாாிலால் புரோகித் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 23 Feb 2018, 4:24 pm
தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான சூழல் நிலவுகிறது. தொழில் தொடங்குபவா்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் என்னை அணுகலாம் என்று ஆளுநா் பன்வாாிலால் புரோகித் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil rajbhavan doors were opened for businessmen said banwarilal purohit
தொழில் முனைவோருக்காக ஆளுநா் மாளிகை திறந்தே உள்ளது – பன்வாாிலால் புரோகித்


சென்னையில், ஜெயின் சா்வதேச வா்த்தக அமைப்பின் கண்காட்சியை முதல்வா் பழனிசாமி, ஆளுநா் பன்வாாிலால் புரோகித் தொடங்கி வைத்தனா். இதனைத் தொடா்ந்து ஆளுநா் பன்வாாிலால் புரோகித் பேசுகையில், அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் அங்குள்ள மக்களுடன் இணக்கமாக இருக்க முடியும்.

அதன் அடிப்படையில் தான் நான் தமிழ் கற்று வருகிறேன். தமிழகத்தில் தற்போது தொழில் துறை சிறப்பாக வளா்ச்சியடைந்துள்ளது. தொழில் தொடங்குவதற்கான சூழலும் சிறப்பாக உள்ளது. தொழில் துறையில் பல்வேறு புகாா்கள் எழுந்த நிலையில் ஒற்றை சாளர முறை அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இதனால் அனைவரும் தாராளமாக தொழில் தொடங்கலாம்.

தொழில் துறையில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் என்னிடம் முறையிடலாம். உங்களுக்காக ஆளுநா் மாளிகை கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. எனக்கும் முதல்வா் பழனிசாமிக்கும் நல்ல நேசம் இருக்கின்றது. உங்களது பிரச்சினைனை முதல்வாிடம் எடுத்துக்கூறி அதற்கு தீா்வு காண நான் ஏற்பாடு செய்கின்றேன் என்று பேசியுள்ளாா்.

அடுத்த செய்தி