ஆப்நகரம்

நானா பபூன்..! திமுக அழுகிப்போன தக்காளி, எதுக்குமே உதவாது - ராஜேந்திர பாலாஜி விமர்சனம்

அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுக தலைவர் ஸ்டாலினை விமரிசித்துள்ளார் .

Samayam Tamil 8 Dec 2020, 2:17 pm
ஜெயலலிதா ஒரு குற்றவாளி அவர் உயிருடன் இருந்தால் இந்நேரம் சிறையில் இருப்பார் என்று ஆர். ராசா விமர்சித்ததற்கு இன்று வரை அதிமுகவும், திமுகவும் மாறி மாறி வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றது. ஸ்டாலின் ஒரு அறிக்கை நாயகர் என்ற பட்டத்தை வழங்கியுள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியதற்கு, ஆத்திரமடைந்த ஸ்டாலின், முதல்வர் பழனிசாமிக்கு ஊழல் நாயகர்’, ‘கரப்ஷன் நாயகர்’ , ‘கமிஷன் நாயகர்’, ‘கலெக்ஷன் நாயகர்’ என்று நான்கு பட்டங்களை கொடுப்பதாக கூறினார்.
Samayam Tamil rajendra balaji


இதற்கிடையில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனது பங்கிற்கு திமுகவை விமர்சித்தார். ஆனால், அதற்கு பதிலளித்த ஸ்டாலின், ராஜேந்திர பாலாஜி ஒரு பபூன் என்று சிம்பிளாக கூறிவிட்டார். இப்படி மாறி மாறி செய்தியாளர்கள் சந்திப்பில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இரு கட்சிகளும் காலாய்த்துக்கொள்வது வாடிக்கையாகி விட்டது. தற்போது, பபூன் என்று ஸ்டாலின் கலாய்த்ததற்கு ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுக்கும் விதமாக, '' நான் ஒன்னும் கோமாளி அல்ல, ஒரு சில தவறுகள் நடக்கும். அது தலைவரால் கண்டிக்கப்படும். தவறுகள் என்பது திருத்திக்கொள்ளப்படும்.

ஆனால், திமுக கட்சி அழுகிப்போன தக்காளி. அது கூட்டுக்கும் உதாவது, குழம்புக்கும் உதவாது'' என விமர்சித்துள்ளார். ஆர், ராசா ஜெயலலிதாவை விமர்சித்ததற்கு அதிமுகவினர் மட்டுமில்லாமல், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனும் கண்டனம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது, '' இது போன்று வரம்பு மீறி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதாலும், அதிகாரத்தில் இருக்கும்போது போட்ட ஆட்டங்களாலும்தான் கடந்த 10 ஆண்டுகளாக இந்த தீய சக்திகளை தமிழ்நாட்டு மக்கள் ஓரங்கட்டி வைத்திருக்கிறார்கள்.

இன்னும் இரண்டு நாள்களுக்கு நின்னு பெய்யும் மழை!

வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலிலும் அதுதான் நடக்கப்போகிறது. அம்மா இல்லை என்பதால் இப்போதே ஆட்சியை பிடித்து விட்டதாக நினைத்து கற்பனை ராஜ்ஜியத்தில் இருக்கும் இவர்களின் கனவுகள் ஒருநாளும் பலிக்க போவதில்லை.

தீய சக்தி கூட்டத்திற்கு சிம்ம சொப்பனமாக புரட்சித்தலைவி ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட உண்மையான பிள்ளைகளான அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்களாகிய நாங்கள் இதையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம்.அதனால் ஸ்டாலினும், ராசா போன்றவர்களும் பேசுவதற்கு முன் யோசித்து நாகரீகமாக பேசுவது நல்லது என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்கிறேன்'' என கூறி திமுகவிற்கு கண்டனத்தை தெரிவித்ததுடன் அதிமுகவிற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளார் டிடிவி.

அடுத்த செய்தி