ஆப்நகரம்

Rajendra Balaji: ராணுவ பட்ஜெட்டை குறைத்து புயல் நிவாரணத்தை மத்திய அரசு வழங்க வேண்டும்

மத்திய அரசு ராணுவத்திற்காக ஒதுக்கும் நிதியை குறைத்துக்கொண்டு கஜா புயலால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திரன் பாலாஜி கோரிக்கை வைத்துள்ளார்.

Samayam Tamil 26 Nov 2018, 11:59 am
மத்திய அரசு ராணுவத்திற்காக ஒதுக்கும் நிதியை குறைத்துக்கொண்டு கஜா புயலால் பாதிக்கபட்டமக்களுக்குநிவாரண நிதி வழங்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திரன் பாலாஜிகோரிக்கை வைத்துள்ளார்.
Samayam Tamil fo


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பால்வளத்துறை அமைச்சர்ராஜேந்திர பாலாஜிமீட்புப்பணிகளில் ஈருபட்டு வருகிறார்.பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள்சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

மக்களின் குறைகளை கேட்ட மத்திய குழுவினர் , டெல்டாவுக்கு நிச்சயம் உதவி செய்வார்கள் எனநம்பிக்கை தெரிவித்தார். இல்லையென்றால் , இந்தியாவில் இருக்க வேண்டுமா என்ற நிலைக்கும் மக்கள்தள்ளப்படுவார்கள் என்றும் கூறினார்.

மேலும் வடக்கு, தெற்குஎன்றபாரபட்சம் பார்க்காமல் , தமிழகத்தில் ஏற்பட்டுள்ளபாதிப்புகளுக்கு உரிய நிவாரணத்தை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் போர் நடக்க வாய்ப்பில்லாத இந்த சூழலில், மத்திய அரசு ராணுவத்திற்காக ஒதுக்கப்படும் நிதியை குறைத்து கொண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கவும் ராஜேந்திர பாலாஜி கோரிக்கை விடுத்தார்.

மேலும், தமிழகமெங்கும் இருக்கும் பெரு நிறுவன முதலாளிகள், ஆலை அதிபர்கள் போன்றவர்கள், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களை தத்தெடுக்கவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தினார்.

அடுத்த செய்தி