ஆப்நகரம்

Rajini Makkal Mandram: அம்மா ஸ்டிக்கர் வரிசையில், ரஜினி படத்துடன் உணவு பொட்டலம் : கடுப்பில் மக்கள்

புயல் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் ரஜினி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 17 Nov 2018, 11:38 am
சென்னை வெள்ளத்தின் போது அம்மா ஸ்டிக்க ஒட்டப்பட்ட உணவுப் பொட்டலம், நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது போன்று அந்த வரிசையில் ரஜினிகந்த் இணைந்துள்ளார்.
Samayam Tamil Rajini food packet


நேற்று அதிகாலை வேதாரண்யம் -நாகை இடையே கஜா புயல் கரையை கடந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோர தாண்டவம் ஆடியது. இதில் பல ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. மேலும் மக்கள் பலரின் வாழ்வாதாரம் தரைமட்டமாக்கி சென்றுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். வங்கக் கடலில் உருவாகி தமிழகத்தை தாண்டி, தற்போது கேரளாவில் தன் தாக்குதலை நடத்தி வருகின்றது கஜா புயல்.

ரஜினி ஸ்டிக்க :
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு, பயன் பெற்ற மக்கள் பெரிய நன்றி தெரிவித்தாலும், கஷ்டத்திலும் தன் அரசியல் பயன் அடைய பார்க்கிறார் என்பது போல் அவரின் படத்துடன் கூடிய ரப்பர் ஸ்டாம்ப் அடிக்கப்பட்ட உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது என பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

சென்னை வெள்ளத்தின் போது, மக்கள் தானாக முன் வந்து வழங்கி உணவுப் பொட்டலம், நிவாரண பொருட்கள் மீது, அதிமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டி வழங்கியதாக அப்போது புகார் எழுந்தது.


அந்த வகையில், தற்போது ஸ்டிக்கர் ஒட்டி ரஜினியும் இணைந்து விட்டாரோ என எண்ணம் தோன்றுவதாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.


இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் ஒருவர்
“உங்களின் ஒப்புதலுடன் தான் இது நடக்கிறதா @rajinikanth சார்
முதலில் உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட உங்கள் ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவை தயார் செய்த நேரத்தைவிட ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான நேரமே அதிகமாகியிருக்கும் ” என குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி பாராட்டு :
முன்னதாக ரஜினியின் மக்கள் மன்றத்தினரின் செயல்பாட்டுக்கு ரஜினி பாராட்டு என டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
“கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆறுதல்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல உதவிகளைச் செய்துவரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை பாராட்டுகிறேன். நமது நிவாரண உதவிகள் தொடரட்டும்.” என தெரிவித்திருந்தார்.

அடுத்த செய்தி