ஆப்நகரம்

ஆமாம்! அந்த சமூக விரோதிகள் யார்? கொஞ்சம் சொல்லுங்க ரஜினி: திருமாவளவன்

தூத்துக்குடி சம்பவத்தில் ரஜினியின் கருத்து குறித்து, திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 31 May 2018, 10:41 am
சென்னை: தூத்துக்குடி சம்பவத்தில் ரஜினியின் கருத்து குறித்து, திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil Thirumavalavan


தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக விரோத சக்திகளே தூத்துக்குடி கலவரத்துக்கு முக்கிய காரணம். தொடர்ந்து போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் என்று கூறினார்.

இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், தூத்துக்குடியில் ஊடுருவிய சமூக விரோதிகள் யார்?

நடிகர் ரஜினிகாந்த் தெளிவுபடுத்த வேண்டும். தியானம், யோகா என இமயமலை சென்று வரும் ரஜினியிடம் சகிப்புத் தன்மையை எதிர்பார்த்தோம்.

ஆனால் ரஜினியிடம் கோபம் வெளிப்படுவது வருந்தத்தக்கது என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

Rajini Should say who is anti social elements says Thirumavalavan.

அடுத்த செய்தி