ஆப்நகரம்

“புனிதப்போர் நடைபெற்ற இடம் இலங்கை” : அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ரஜினி!

“புனிதப்போர் நடைபெற்ற இடம் இலங்கை” : அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ரஜினி!

TOI Contributor 25 Mar 2017, 4:29 pm
ரஜினியின் இலங்கை பயணம் ரத்து செய்யப்படுவதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இலங்கை புனிதப்போர் நடைபெற்ற இடம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Samayam Tamil rajini statement regarding srilanka visit
“புனிதப்போர் நடைபெற்ற இடம் இலங்கை” : அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ரஜினி!


ரஜினியின் 2.0 படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் இலங்கையை சேர்ந்தது. இந்நிறுவனம் இலங்கையில் உள்ளவர்களுக்கு 150 வீடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ரஜினிகாந்த் தன் பயணத்தை ரத்து செய்துள்ளார். இலங்கை இனப்படுகொலை விசாரணைக்கு ஐநா இரண்டு ஆண்டுகள் அவகாசம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பதற்கு, அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதை திசை திருப்ப இலங்கை ரஜினியை அழைத்துள்ளது என்று அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும் இலங்கையின் இந்த அரசியலில் ரஜினி சிக்கிக்கொள்ளக்கூடாது என்றும் எச்சரித்தனர்.

இந்நிலையில் பயணம் ரத்து குறித்து ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மூன்றாவது பக்கத்தில் “இனி வரும் காலங்களில் இலங்கை சென்று அங்கே வாழும் தமிழ் மக்களை சந்தித்து, அவர்களை மகிழவைத்து, அந்த புனிதப்போர் நிகழ்ந்த பூமியை காணும் பாக்கியம் கிடைத்தால், தயவு செய்து அதை அரசியலாக்கி போகவிடாமல் செய்துவிடாதீர்கள் என்று அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி