ஆப்நகரம்

சத்தம் போட்டால் போடட்டும். நாம் அமைதியாக இருப்போம்: ரஜினி

அரசியலில் மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் அமைதியாக இருப்போம் என்ற நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Feb 2018, 12:29 pm
அரசியலில் மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் அமைதியாக இருப்போம் என்ற நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil rajinikanth addressing fans in chennais kodambakkam
சத்தம் போட்டால் போடட்டும். நாம் அமைதியாக இருப்போம்: ரஜினி


சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், நடிகர் ரஜினிகாந்த் தனது நெல்லை மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார்.

அப்போது பேசிய அவர், அரசியலில் மற்றவர்கள் எல்லோரும் வேகமாக அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்று நிறைய பேர் விமர்சித்து வருகிறார்கள். மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும். நாம் அமைதியாக இருப்போம் என்று தெரிவித்தார்.


மேலும், தமிழகத்தில் 32 மாவட்டங்களுக்கு 32 மாடி கட்டிக்கொண்டிருப்பதாகவும், அதற்கு ஏற்றவாறு அடித்தளம் என்பது வலுவாக இருக்க வேண்டும் என்றும் கூறிய ரஜனி, மிக ஆழமான அடித்தளம் கட்டமைப்பை கட்டிக் கொண்டிருக்கிறோம், ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக கையாள வேண்டும் என்றும் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், தனது ரசிகர்களுக்கு யாரும் அரசியல் கற்றுத்தர வேண்டாம் என்றும் தனது அரசியல் குடும்பத்தைப் பொறுத்தவரை ஒரு தலைவனாக நான் சரியாக இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி