ஆப்நகரம்

சம்மதிக்காத ரஜினி; மனம் மாறிய சசிகலா: கூட்டணிக்கு பின்னால் உள்ள கணக்கு!

அதிமுக - பாஜக கூட்டணியை உறுதிப்படுத்திய இரு முக்கிய காரணிகளாக சசிகலாவும் ரஜினிகாந்துமே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 23 Nov 2020, 8:44 am
அதிமுக - பாஜக கூட்டணி சட்டமன்றத் தேர்தலிலும் தொடருமா என்ற விவாதம் முடிவுக்கு வந்துள்ளது. அரசு நிகழ்ச்சியில் துணை முதல்வரும், முதல்வரும் போட்டி போட்டுக்கொண்டு பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அறிவித்தனர். எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடரும் என அமித் ஷாவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil rajinikanth and sasikala are the two main factors that have strengthened the aiadmk bjp alliance
சம்மதிக்காத ரஜினி; மனம் மாறிய சசிகலா: கூட்டணிக்கு பின்னால் உள்ள கணக்கு!


கூட்டணியை உறுதி செய்த அமித் ஷா வருகை!

பாஜக நிர்வாகிகளின் கூட்டணி குறித்த முன்னுக்குப் பின் முரணான பேச்சு, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அதிருப்தி, ரஜினியின் வருகையை எதிர்பார்த்திருந்தது உள்ளிட்ட ஏராளமான காரணங்கள் அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்வியை பலமாக எழுப்பின. ஆனால் அமித் ஷாவின் வருகை இதை உறுதிப்படுத்தி பல கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தலையை ஆட்ட மறுத்த ரஜினி

அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தாலும் ரஜினிகாந்தை கட்சி தொடங்கச் செய்து அவரோடு இணைந்து மூன்றாவது அணியை அமைக்க பாஜக திட்டமிட்டுவருவதாக தகவல்கள் வெளிவந்தன. இதனால் ரஜினிகாந்துடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் மறைமுகமாக நடைபெற்றதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆனால் ரஜினிகாந்த் பல்வேறு காரணங்களைச் சொல்லி சமாளித்து வந்தார். கொரோனா பரவல், தனது உடல்நிலை ஆகியவையும் ரஜினி தரப்பில் காரணங்களாக சொல்லப்பட்டு வந்தன. அமித் ஷாவுக்கும் ரஜினிக்கும் மீடியேட்டராக செயல்பட்டு வரும் துக்ளக் குருமூர்த்தி அண்மையில் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் பேசினார்.

அதிமுக 117 - பாஜக 117: அமித் ஷா வைக்கும் டிமாண்ட்!

காத்திருக்கும் ரஜினி ரசிகர்கள்!

அந்த சந்திப்புக்குப் பின் ரஜினிகாந்திடம் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியான அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. தமிழகம் வரும் அமித் ஷா ரஜினிகாந்தை சந்திப்பாரா, ரஜினிகாந்த் அமித் ஷாவை சென்று சந்திப்பாரா என்றும் கேள்விகள் எழுந்த நிலையில் அப்படியான சந்திப்புகளும் நடைபெறவில்லை. இதற்கிடையே அதிமுக - பாஜக கூட்டணியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரஜினிகாந்த் இனி அரசியலுக்கு வருவது சந்தேகம் என்று கூறுகின்றனர் ஒரு தரப்பினர். அதேசமயம் அடுத்த மாதம் ரஜினியின் பிறந்தநாளுக்கு ஏதேனும் அறிவிப்பு வெளியாகுமா என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஒட்டிக் கொண்ட ஒபிஎஸ் -இபிஎஸ்

அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியிருப்பது மற்றொரு கேள்வியையும் எழுப்பியுள்ளது. அது சசிகலாவின் விடுதலை விவகாரம். சசிகலாவை வெளியே கொண்டு வந்து தற்போதைய அதிமுக தலைமைக்கு பாஜக செக் வைக்க முகாந்திரம் உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் அமித் ஷாவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிட்டதால் சசிகலாவின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

ஊரடங்கில் அடுத்தகட்ட தளர்வு: இனிமே ஜாலியா போகலாம்!

மனம் மாறிய சசிகலா

ஆகஸ்ட் மாதமே சசிகலாவை வெளியே கொண்டு வருவதற்கும், அபராதத் தொகையை செலுத்துவதற்கும் சசிகலா தரப்பினர் தயாராக இருந்தனர். ஒரு வழியாக கடந்த சில நாள்களுக்கு முன் அபராதத் தொகை செலுத்தப்பட்டது. ஜனவரி இறுதியில் சசிகலா விடுதலையாவார் என்றிருக்கும் நிலையில் முன்கூட்டியே வெளியே கொண்டுவர அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. நன்னடத்தை விதிகள் முக்கிய காரணமாக கூறப்பட்டது. சசிகலாவுக்கு இந்த விதிகள் பொருந்தாது என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்து வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மேலிடத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு பெரிய தொகை எதிர்பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. சசிகலாவோ அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன் இத்தனை ஆண்டுகள் இருந்துவிட்டேன், இன்னும் சில நாள்கள் தானே என்ற மனநிலைக்கு வந்துவிட்டதாக கூறுகின்றனர்.

தொகுதிகளை கறக்க திட்டம்!

சபரிமலை பக்தர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

சசிகலாவுடனான பேரம் முடியாமல் போனது, ரஜினிகாந்த் தொடர்ந்து தயக்கம் காட்டுவது ஆகியவை பாஜக - அதிமுக கூட்டணியை உறுதிபடுத்தியுள்ளது. தற்போது எத்தனை தொகுதிகளை அதிமுகவிடமிருந்து கேட்டுப் பெறலாம், என்னென்ன தொகுதிகளைப் பெறலாம் என்று அமித் ஷா நிர்வாகிகளிடம் கேட்டு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரட்டை இலக்கத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேண்டும் என்று கூறப்படுவதால் 60 தொகுதிகளிலிருந்து பேரத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி