ஆப்நகரம்

காவேரி மருத்துவமனையில் கருணாநிதியை நலம் விசாரித்த ரஜினி!

திமுக தலைவர் கருணாநிதி நான்காவது நாளாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

Samayam Tamil 31 Jul 2018, 9:02 pm
திமுக தலைவர் கருணாநிதி நான்காவது நாளாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
Samayam Tamil Karunanidhi rajini



தி.மு.க. தலைவா் கருணாநிதி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருந்தவாறு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் காவேரி மருத்துவமனை தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.


கண் திறந்தார் கருணாநிதி: வெளியானது கருணாநிதியின் மருத்துவமனைப் புகைப்படம்!!


அந்த அறிக்கையில், “கருணாநிதிக்கு வயது முதிர்வு காரணமாக சிறுநீரக குழாயில் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு சிறிது காய்ச்சல் உள்ளது. அவரை 24 மணி நேரமும் மருத்துவா், செவிலியா் குழு தீவிரமாக கவனித்து வருகிறது. தற்போது வீட்டிலேயே அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது,” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


கலைஞர் கருணாநிதியின் சினிமா பயணம்- சிறப்புத் தொகுப்பு

திமுக தலைவராக 50வது ஆண்டில் அடி எடுத்து வைத்த கருணாநிதி!


இதையடுத்து, தமிழக துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் மூத்த அமைச்சா்களான ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், மதிமுக தலைவர் வைகோ, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், உள்ளிட்டோர் நேரில் சென்று அவரின் உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றனர்.


மேலும், தேசிய தலைவர்களான பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, சீதாராம் யெச்சூரி, கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர் அவர் உடல்நலம் சீராக வேண்டும் என வேண்டுவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், படப்பிடிப்புக் காரணமாக டேராடூன் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இன்று மாலை தமிழகம் வந்தடைந்தார். தொடர்ந்து இன்று இரவு காவேரி மருத்துவமனைக்குச் சென்ற அவர், ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

அடுத்த செய்தி