ஆப்நகரம்

சுஜித்துக்கு ரஜினிகாந்த் இரங்கல்!!

''சுஜித்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜித்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்'' என்று நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 29 Oct 2019, 2:50 pm
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் கடந்த 25ஆம் தேதியன்று இரண்டு வயது சிறுவன் சுஜித் தவறி விழுந்து விட்டான். இதையடுத்து, சிறுவன் சுஜித்தை மீட்கும் பணிகள் நடைபெற்றன.
Samayam Tamil rajinikanth 2


தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர், வருவாய் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் இரவு, பகல் பாராமல் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என ஏராளமானோர் சம்பவ இடதுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். சிறுவன் சுஜித்திற்காக தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஏராளமானோர் சாதி, மத பேதமின்றி பிரார்த்தனை செய்து வந்தனர்.

கடுமையான பாறைகள், இயந்திரத்தில் பழுது, குறுக்கிடும் மழை என அவ்வப்போது மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டாலும் விடா முயற்சியுடன் சிறுவனை மீட்கும் பணிகள் கடந்த 5 நாட்களாக 80 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் சிறுவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

சுஜித் மீட்கப்பட்டு வரும்போது அதுகுறித்து நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து இருந்த ரஜினிகாந்த், ''சுர்ஜித் உயிருடன் மீண்டு வர கடவுளிடன் பிரார்த்திக்கிறேன். குழந்தைகளை பாதுகாப்பதில் பெற்றோரும் கவனமாக இருக்க வேண்டும்.
சுஜித்தைப் பார்த்து டிவியில் மூழ்கிய பெற்றோர்; தண்ணீரில் விழுந்து இறந்தது குழந்தை!!

ஆழ்துளைக் கிணறுகள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். குழந்தையை மீட்க அரசும், அதிகாரிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அதனால் அவர்களை குறை சொல்ல முடியாது'' என்றும் தெரிவித்து இருந்தார்.

என் மனம் வலிக்கிறது: சுஜித்துக்கு அமைச்சர் விஜய பாஸ்கர் உருக்கமான கடிதம்!!

ஆனால், தற்போது மரணம் அடைந்து இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் தனது ஆழ்ந்த இரங்கலை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

தனது பதிவில், ''சுஜித்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜித்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

லதா ரஜினிகாந்தும் தனது வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி