ஆப்நகரம்

காவிரி உள்ளிட்ட பல விஷயங்களில் கருத்து கூறாமல் நழுவி ஓடும் ரஜினிகாந்த்; கமல் கடும் விமர்சனம்!

அரசியல் தொடர்பாக ரஜினிகாந்தை, கமல் ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 12 Mar 2018, 5:46 pm
கோவை: அரசியல் தொடர்பாக ரஜினிகாந்தை, கமல் ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Samayam Tamil rajinikanth escape from active political comments says kamal haasan
காவிரி உள்ளிட்ட பல விஷயங்களில் கருத்து கூறாமல் நழுவி ஓடும் ரஜினிகாந்த்; கமல் கடும் விமர்சனம்!


கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோவையில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும். தண்ணீர் சேமிப்பில் அனைவரும் ஈடுபட வேண்டும்.

மேலும் காவிரி விவகாரத்தில் ரஜினி பேசவில்லையே என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த கமல், காவிரி விவகாரம் மட்டுமல்ல, பல்வேறு விஷயங்களில் பதிலளிப்பதில் இருந்து ரஜினிகாந்த் நழுவிச் செல்வதாக குறிப்பிட்டார்.

திரையுலகில் 40 ஆண்டுகால நட்புடன் இருக்கும் ரஜினி, கமல் இருவரும் ஒருசேர அரசியலில் இறங்கியுள்ளனர். இந்த சூழலில் ரஜினியை முதல் முறையாக கமல் கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குரங்கணி காட்டுத்தீ சம்பவம், வனத்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப ஒரு பாடமாக அமைந்துள்ளது. தீயில் உயிரிழந்த ஜெயஸ்ரீயின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன். இந்த விபத்திற்கு யாரும் காரணமில்லை.

வருங்கால சமுதாயத்தின் ஒருசிலரை இழந்து நிற்கிறோம். மலையேறும் பயிற்சி முற்றிலும் வேண்டாம் என்று சொல்லக் கூடாது. வருங்காலங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

கொண்டாட்டங்களில் ஈடுபட சிலர், வனப்பகுதிக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது, இயற்கையை சிதைக்காமல், வாழ்த்து வணங்கி விட்டு வரவேண்டும்.

பவானி ஆற்றின் குறுக்கே மூன்றாம் அணை கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கேரள அரசு தொடர்பான கேள்விக்கு, நமது மக்களின் நிலைப்பாட்டை அண்டை மாநிலங்களுக்கு எடுத்துரைப்பேன் என்றார். முன்னதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து, இதுதொடர்பாக பேசியுள்ளேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் ஆலோசித்து தீர்வு காண வேண்டும். ஆனால் தீர்க்க முடியாத பிரச்சனையாக காவிரியை மாற்றிவிடக் கூடாது. தேர்தல் விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருந்தால், தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமை இருக்காது.

பணமதிப்பிழப்பு விவகாரத்தைப் பொறுத்தவரை, முதலில் ஆதரித்தேன். ஆனால் பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிட்டது போல், இன்னும் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தி இருக்கலாம்.

ஜி.எஸ்.டியைப் பொறுத்தவரை அனைத்து துறையினரும் தங்கள் நிலைப்பாட்டை ஒன்றிணைந்து வெளிப்படுத்த வேண்டும் என்று கமல் ஹாசன் கூறினார்.

Rajinikanth escape from active political comments says Kamal Haasan.

அடுத்த செய்தி