பிரதமர் நரேந்திர மோடிக்கு முழுமையான ஆதரவு அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆற்றிய வானொலி உரையில் தூய்மையே சேவை என்ற இயக்கம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். தூய்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த இயக்கம் கடந்த 15ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு முழுமையான ஆதரவு அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மையே சேவை திட்டத்திற்கு எனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன். தூய்மை இருக்கும் இடமே இறைவனின் இருப்பிடம்.” என்று ரஜினி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
I extend my full support to our hon. Prime Minister @narendramodi ji’s #SwachhataHiSeva mission. Cleanliness is godliness. — Rajinikanth (@superstarrajini) September 22, 2017 இதனையடுத்து, ரஜினி பாஜகவுடன் இணைவதற்கு பரிசம் போடுகிறாரா? என்று அவரது ஆதரவாளர்கள் அரசியல் கணக்கு போடத்தொடங்கியுள்ளனர். கூட்டிக்கழிச்சிப் பார்த்தால் தலைவர் போடும் கணக்கு சரியா வரும் என்று ரஜினி ரசிகர்கள் வழக்கம்போல காலா புகழ் பாடி சமூக வலைத்தளங்களை நிரப்பி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆற்றிய வானொலி உரையில் தூய்மையே சேவை என்ற இயக்கம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். தூய்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த இயக்கம் கடந்த 15ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு முழுமையான ஆதரவு அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மையே சேவை திட்டத்திற்கு எனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன். தூய்மை இருக்கும் இடமே இறைவனின் இருப்பிடம்.” என்று ரஜினி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
I extend my full support to our hon. Prime Minister @narendramodi ji’s #SwachhataHiSeva mission. Cleanliness is godliness. — Rajinikanth (@superstarrajini) September 22, 2017 இதனையடுத்து, ரஜினி பாஜகவுடன் இணைவதற்கு பரிசம் போடுகிறாரா? என்று அவரது ஆதரவாளர்கள் அரசியல் கணக்கு போடத்தொடங்கியுள்ளனர். கூட்டிக்கழிச்சிப் பார்த்தால் தலைவர் போடும் கணக்கு சரியா வரும் என்று ரஜினி ரசிகர்கள் வழக்கம்போல காலா புகழ் பாடி சமூக வலைத்தளங்களை நிரப்பி வருகின்றனர்.