ஆப்நகரம்

துப்பாக்கிச் சூடு: தூத்துக்குடி செல்ல மறுக்கும் ரஜினிகாந்த்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்துள்ளார்.

Samayam Tamil 22 Feb 2020, 11:53 am
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
Samayam Tamil rajinikanth


இந்த ஆணையம் இந்த சம்பவம் தொடர்பாக பலரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகிறது.

அப்போது ரஜினிகாந்த் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற தூத்துக்குடி சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், போராட்டத்தில் விஷக் கிருமிகள், சமூக விரோதிகள் போராட்டத்தில் உள்ளே புகுந்துள்ளனர். தமிழ்நாட்டில் சமூக விரோதிகள் அதிகமாகிவிட்டனர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் இதுதான் நடைபெற்றது” என பேசினார்

தூத்துக்குடியில் ரஜினியை அதிரவைத்தவர் கைது!

அப்போது அந்த பேச்சு பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் ரஜினிகாந்தை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் சில நாள்களுக்கு முன்னர் கேள்விஎழுப்பிய போது, “ சம்மன் இன்னும் எனக்கு கிடைக்கப்பெறவில்லை. சம்மன் வந்தபிறகு அவர்கள் கேட்கும் கேள்விக்கு அங்கு பதில் சொல்வேன்” என்றார்.

3ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்: செயலில் இறங்கும் கமல்

இந்நிலையில் பிப்ரவரி 25ஆம் தேதி நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்துள்ளார். “ஆஜராகும்போது ரசிகர்கள் அதிக அளவில் கூடினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் பதில் தரத் தயார்” என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி