ஆப்நகரம்

தம்பி விஜய் வந்த பின்னர் ரஜினிகாந்த்தின் மவுசு குறைந்துவிட்டது: சீண்டும் சீமான்!!

தம்பி விஜய் வந்த பின்னர் ரஜினிகாந்த்தின் மவுசு குறைந்துவிட்டது: சீண்டும் சீமான்!! அரசியல் களத்தில் எப்போதும் நடிகர் ரஜினிகாந்தை வம்புக்கு இழுக்கும் சீமான் இந்த முறை அவரை திருப்பதி ஏழுமலையானுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

Samayam Tamil 28 Aug 2019, 10:37 am
காஞ்சிபுரத்தில் சுங்குவார் சத்திரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், ''தமிழகம் முழுவதும் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக அத்தி வரதருக்குத்தான் தொலைக்காட்சிகளில் அதிக வரவேற்பு இருந்தது. தற்போது அவர் குளத்திற்குள் வைக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil Seeman


அவரை கடைசியாக ரஜினிகாந்தும், நயனதாராவும் பார்த்து குட்பை வைத்து அனுப்பியுள்ளனர். இங்கு குறிப்பிட்டு கூறி மகிழ்ச்சி அடைய வேண்டிய விஷயம் என்னவென்றால், அத்தி வரதர் வருகையால், திருப்பதி வெங்கடாசலபதியின் மவுசு குறைந்துவிட்டது என்பதுதான். அதாவது தம்பி விஜய் வந்த பின்னர் ரஜினிகாந்த்தின் மவுசு குறைந்தது போல.

பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்பதற்காக வெளிநாடு பயணம்- முதல்வர் பேட்டி!
பேச்சுவார்த்தையில் உடன்பாடு- அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்!

எடப்பாடியை ஸ்டாலினால் அசைக்க கூட முடியவில்லை. இந்த நேரத்தில் ரஜினிகாந்த் வந்தால் அரசியல் களம் சூடுபிடிக்கும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அவ்வப்போது கூறி வருகிறார். ஆனால், அவர் வந்த மாதிரியும் இல்லை. அவருக்காக நான் வெயிட்டிங். மானத் தமிழனா? மராட்டியனா என்பதை பார்க்கலாம்'' என்று சவால் விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி