ஆப்நகரம்

Rajinikanth: தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் மகிழ்ச்சி - ரஜினி பரபரப்பு!

புதிதாக அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதை இங்கே விரிவாக காணலாம்.

Samayam Tamil 6 Dec 2020, 8:09 am
சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அரசியல் மாற்றம் மிக முக்கியம். கட்டாயம் என்பதால் கட்சி தொடங்குகிறேன். கொடுத்த வாக்கில் இருந்து நான் ஒருபோதும் மாற மாட்டேன். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக 2017ஆம் ஆண்டே அறிவித்திருந்தேன். அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் என்கிற முழக்கத்துடன் மக்களை சந்திப்போம். தேர்தலில் நான் வென்றாலும் அது மக்களுக்கான வெற்றியாகத் தான் இருக்கும்.
Samayam Tamil Rajinikanth


மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தேன். கொரோனா காரணமாக என்னால் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதால் எனக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. கொரோனாவை எதிர்கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை. மருத்துவர்கள் அறிவுறுத்தல் காரணமாக என்னால் மக்களை நேரடியாக சந்திக்க முடியவில்லை.

இருப்பினும் தமிழக மக்களின் பிரார்த்தனையால் தான் சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து திரும்பி உயிரோடு வந்தேன். தமிழக மக்களுக்காக எனது உயிரை போனாலும் எனக்கு மிகவும் சந்தோஷம் தான். அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் இன்னும் 40 சதவீதம் மீதமுள்ளது. அதனை முடித்துக் கொடுக்க வேண்டியது எனது பொறுப்பு. பின்னர் எனது அரசியல் செயல்பாடுகள் தீவிரமாக இருக்கும் என்றார்.

ஜனவரியில் கட்சி: ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு!

புதிய நிர்வாகிகள் நியமனம்

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் அறிவுசார் பிரிவின் முன்னாள் தலைவராக இருந்த அர்ஜூனமூர்த்தியை தன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ரஜினிகாந்த் நியமித்துள்ளார்.

இதையடுத்து பேசிய தமிழருவி மணியன், வெறுப்பு அரசியலை புறந்தள்ளி ரஜினி ஆன்மிக அரசியலை முன்னெடுக்க உள்ளார். ரஜினி தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் அரசியல் களம் புகுந்துள்ளார். ரஜினியின் அரசியல் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்து உடன் பயணிப்பேன் என்றார்.

அடுத்த செய்தி