ஆப்நகரம்

ரஜினிகாந்த் ஒரு வியாபாரி: அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசம்!!

''ரஜினி ஒரு அரசியல் வியாபாரி. இன்று ஒன்று பேசுவார், நாளை ஒன்று பேசுவார்'' என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

TOI Contributor 22 May 2017, 5:17 pm
''ரஜினி ஒரு அரசியல் வியாபாரி. இன்று ஒன்று பேசுவார், நாளை ஒன்று பேசுவார்'' என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Samayam Tamil rajinikanth is a business man says minister sellur raju
ரஜினிகாந்த் ஒரு வியாபாரி: அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசம்!!


நடிகர் ரஜினிகாந்த சமீபத்தில் சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசினார். ''நான் பச்சை தமிழன். நான் அரசியல் பேசினாலே விமர்சனங்கள் எழுகிறது. போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்'' என்று கூறி இருந்தார். இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. பாஜகவோ அவரை எப்படியும் தனது பக்கம் இழுத்துவிட வேண்டும் என்று தயாராகி வருகிறது. இதுவரை இவரது அரசியல் பிரவேசம் குறித்து பேசாத அமித்ஷா, நேற்று ரஜினியை வரவேற்று பேசியுள்ளார்.

இந்நிலையில், மதுரையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்டபோது, ''எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சி தொடங்கியவர்கள் கதி என்னவானது என்பது அனைவருக்கும் தெரியும். ரஜினி கூறுவதையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. தமிழகத்தில் சிஸ்டம் நன்றாகத்தான் உள்ளது. தமிழகத்தில் ஒரே கடவுள், தலைவர் என்றால் அது தலைவர் எம்.ஜி.ஆர்தான். அவருக்குப் பின்னால் யாராலும் அவரைப் போல வர முடியவில்லை. சிவாஜி அரசியலுக்கு வர நினைத்தார். ஆனால், அவரால் வர முடியவில்லை. நடிகர் ரஜினிகாந்த் ஒரு வியாபாரி; இன்று ஒன்றுபேசுவார், நாளை ஒன்று பேசுவார்; நடிகர்கள் பின்னால் போவதை மக்கள் தவிர்த்துவிட்டனர்'' என்றார்.

Rajinikanth is a business man says minister sellur Raju

அடுத்த செய்தி