ஆப்நகரம்

சசிகலா ஒரு பக்கம், ரஜினி மறு பக்கம் : ஓபிஎஸ் நடத்தும் சைலன்ட் தர்ம யுத்தம்!

ஒ.பன்னீர் செல்வத்தின் சமீபத்திய பேட்டிகள், ட்விட்டர் பதிவுகள் அதிமுக தலைமையை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 12 Dec 2020, 10:12 am
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கட்சிகள் வாக்குகளை வேட்டையாட தீவிரமாக களமாடி வருகின்றன. கட்சிகளுக்கு இடையேயான போட்டி ஒருபக்கம் என்றால் கட்சிக்குள்ளேயும் போட்டிகள் நடைபெற்றுத் தான் வருகின்றன. தமது ஆதரவாளர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும், கட்சிப் பணியில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என ஒவ்வொரு கட்சியிலும் கோஷ்டிகள் உருவாகி தலைமைக்கு ஏதேனும் ஒருவகையில் நிர்பந்தம் கொடுக்கும்.
Samayam Tamil rajinikanth on one side sasikala on the other silent dharma yuddham against eps by ops
சசிகலா ஒரு பக்கம், ரஜினி மறு பக்கம் : ஓபிஎஸ் நடத்தும் சைலன்ட் தர்ம யுத்தம்!


ஆமா, இதுவும் தேர்தல் பணிதானே!

வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தல், பூத் வாரியாக நிர்வாகிகளை நியமித்தல் ஆகிய பணிகளைப் போல மாற்றுக் கட்சியிலிருந்து ஆள்களை கவர்ந்து வருதலும் தேர்தல் பணிகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் எப்படியாவது காலூண்றிவிட வேண்டுமென பல வழிகளில் முயற்சித்து வரும் பாஜக இந்தப் பணியை சற்று கூடுதலாகவே பார்த்து வருகிறது. பாஜகவின் தூண்டுதலால் கட்சி தொடங்குகிறார் என விமர்சிக்கப்படும் ரஜினி பாஜகவின் முக்கிய நிர்வாகியை தன் பக்கம் அழைத்துவந்து முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளார்.

ஓபிஎஸ் வைக்கும் ட்விஸ்ட்!

ரஜினிகாந்த் 71: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்கும் தேதியை டிசம்பர் 31ஆம் தேதி அறிவிக்க உள்ள நிலையில் யார் யார் அவருக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ற விவாதம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியிலும் ரஜினி பக்கம் தாவ வாய்ப்புள்ள நிர்வாகிகள் யார் யார் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. அதிமுகவின் முன்னாள் மேயர் பெயர் இதில் முன்னணியில் பேசப்படுகிறது. அதேபோல் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சமீபத்திய அணுகுமுறை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

முரண்படும் ஓபிஎஸ் - இபிஎஸ்

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியிட்டதும், “ரஜினிகாந்தின் அரசியல் வரவு நல்வரவாகட்டும், எதிர்காலத்தில் ரஜினிகாந்த் உடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது” என்று பேசினார். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, “ரஜினிகாந்த் முதலில் கட்சியை பதிவு செய்யட்டும் அதன்பின் கருத்து தெரிவிக்கிறேன். பன்னீர் செல்வம் கூறியது அவரது சொந்த கருத்து. கருத்துகூற அனைவருக்கும் உரிமை இருக்கிறது” என்றார்.

ரஜினிக்கு வாழ்த்து சொன்ன ஓபிஎஸ்

இன்று ரஜினிகாந்த் தனது 71ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் நேற்று இரவே ட்விட்டர் மூலமாக தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் ஓபிஎஸ். ''தனது அயராத உழைப்பாலும், அபார திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து சூப்பர் ஸ்டாராக கோலோச்சி வரும் அன்பு சகோதரர் ரஜினிகாந்த் அவர்கள் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று அவர் பதிவிட்டுள்ளார்.

ரஜினிக்கு முட்டுக்கட்டை போடுவாரா எடப்பாடி?

ஓபிஎஸ் ரஜினிகாந்தின் கட்சி அறிவிப்புக்கு உடனடியாக வரவேற்பு தெரிவித்ததும், பிறந்தநாளுக்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்ததும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ்ஸின் இந்த அணுகுமுறை எடப்பாடி பழனிசாமி தரப்பு ரசிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் கட்சி அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாகவே அப்படியான முடிவை அவர் எடுத்துவிடக்கூடாது என எடப்பாடி தரப்பிலும் சில முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியானது. ஏனென்றால் ரஜினி கட்சி தொடங்கினால் அவர் பிரிக்கும் வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவின் வாக்குகளாகத் தான் இருக்கும் என எடப்பாடி தரப்பு கணக்கு போடுகிறது. அதனாலே ரஜினியின் வருகையை மிகுந்த எச்சரிக்கையுடன் எடப்பாடி தரப்பு பார்க்கிறது என்கிறார்கள்.

சசிகலாவுக்கு சாமரம் வீசத் தயாரா?

சில தினங்களுக்கு முன் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஓ.பன்னீர் செல்வம். அப்போது பேசிய அவர், “அரசாங்கத்தை ஆண் இரண்டரை ஆண்டுகளும், பெண் இரண்டரை ஆண்டுகளும் ஆட்சி செய்தால் சிறப்பாக இருக்கும் ” என்றார். ஓபிஎஸ்ஸின் பேச்சு அந்த நிகழ்ச்சியோடு தொடர்புடையதாக தெரிந்தாலும் அரசியல் உள் அர்த்தம் இல்லாமல் இல்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். சசிகலாவின் விடுதலை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கத்தை பெண்கள் கையில் இரண்டரை ஆண்டுகள் தர வேண்டும் என்ற பேச்சு மீண்டும் எடப்பாடி தரப்பை சீண்டிப்பார்த்துள்ளது என்கின்றனர்.

சசிகலாவுக்கு சிறையில் நடந்த பரீட்சை!

அதிருப்திக்கு இதுதான் காரணம்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பஞ்சாயத்து சில மாதங்களுக்கு முன் தீவிரமாக நடைபெற்றுவந்த நிலையில் கட்சியின் நிர்வாகிகள், அமைச்சர்களின் பலமான ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமியே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை போட்டியில் இடம்பெற்ற ஓ.பன்னீர் செல்வமே அறிவிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. ஓபிஎஸ் அணி அதிமுகவுடன் இணைந்த பிறகு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்ட பின்னர் தொடர்ந்து ஓபிஎஸ் புறக்கணிக்கப்படுவதாகவும், எடப்பாடி பழனிசாமி மட்டுமே அதிகளவில் முன்னிறுத்தப்படுவதாகவும் அதிருப்தி குரல்கள் எழுந்தன.

சைலன்ட் தர்மயுத்தம்!

ரஜினிக்காக விஜய்க்கு வைக்கும் செக்? அமித் ஷாவின் மாஸ்டர் பிளான்!

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே அறிவிக்கப்பட்டுள்ளதால் தனது இருப்பை அவ்வப்போது காட்ட வேண்டிய கட்டாயத்துக்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டுள்ளார் என்கிறார்கள். இதன் காரணமாக எடப்பாடியை கடுப்பேத்தும் விதமாக ரஜினி, சசிகலா என ஓபிஎஸ் சில ஆயுதங்களை பிரயோகிக்கிறார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். கடந்த முறை அவர் சசிகலாவுக்கு எதிராக வெளியே வந்து வெளிப்படையாக தர்மயுத்தம் நடத்தியது போல் இப்போது நிலைமை தனக்கு சாதகமாக இல்லை என்பதை உணர்ந்தே மறைமுகமாக எடப்பாடிக்கு எதிராக சைலன்ட் தர்மயுத்தம் நடத்துகிறார் என்கிறார்கள்.

அடுத்த செய்தி