ஆப்நகரம்

கொள்கையை கேட்டவுடன் ஏன் தலை சுற்றியது? - ரஜினி விளக்கம்

எம்.ஜி.ஆா். பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆா். சிலை திறக்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் நடிகா் ரஜினிகாந்த் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்து பேசினாா்.

Samayam Tamil 5 Mar 2018, 9:47 pm
சென்னை : எம்.ஜி.ஆா். பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆா். சிலை திறக்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் நடிகா் ரஜினிகாந்த் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்து பேசினாா்.
Samayam Tamil rajinikanth speech on his political policy
கொள்கையை கேட்டவுடன் ஏன் தலை சுற்றியது? - ரஜினி விளக்கம்


ஏன் தலை சுற்றியது :
எம்.ஜி.ஆர் சிலை திறந்து வைத்த பின் பேசிய ரஜினிகாந்த், அவரின் அரசியல் பிரவேசம் குறித்து எழுந்து வரும் பல்வேறு கேள்விகள், விமர்சனங்கள் குறித்து பேசினார். அதில் முக்கியமானது கொள்கை குறித்து கேட்ட போது எனக்கு தலையே சுற்றிவிட்டது என கூறியிருந்தார்.

மேலும் படிக்க : அரசியல்வாதிகள் கடமை தவறியதால் நான் அரசியலுக்கு வருகிறேன் – ரஜினிகாந்த்

எம்.ஜி.ஆா். போன்ற ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் – ரஜினிகாந்த்

பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க வேண்டாம் - ரஜினி

இது குறித்து ரஜினி பதிலளிக்கையில், “நான் டிசம்பர் 31ம் தேதி அரசியலுக்கு வருவேனா? இல்லையா? என தெரிவிப்பதாக சொல்லியிருந்தேன். ஆனால் 29ம் தேதி பத்திரிக்கையாளர்கள் உங்கள் கொள்கை என்ன என கேட்கிறார்கள்.

இது எப்படின்னா பொண்ணு பார்க்க போய்கொண்டிருக்கும் பொழுது, எனக்கு கல்யாண அழைப்பிதழ் வரவில்லை என கேட்ட மாதிரி இருக்கு.” என பதிலளித்துள்ளார்.

அடுத்த செய்தி