ஆப்நகரம்

Rajinikanth: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்கள் தெரிவித்து, ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

Samayam Tamil 16 Nov 2018, 11:31 pm
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆறுதல்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல உதவிகளைச் செய்துவரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை பாராட்டுகிறேன். நமது நிவாரண உதவிகள் தொடரட்டும்.
Samayam Tamil Kabali-Rajinikanth-Latest-Stills-1-11
கஜா புயலால் பாதிப்பு குறித்து ஆறுதல் தெரிவித்த ரஜினிகாந்த்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தொடர்ந்து களப்பணி ஆற்றுவார்கள் என ரஜினிகாந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த கஜா புயலானது, நேற்றிரவு 11 மணியளவில் தமிழகத்தின் கடலோரத்தைத் தொட்டது. நள்ளிரவு 12.30 மணியளவில் ஆக்ரோஷமாக கரையைக் கடக்க தொடங்கியது. அப்போது முதல் அதிகாலை 2.30 மணி வரை மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் மிக பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.


இதனால் பெரும் சேதங்கள் ஏற்படக்கூடும் என முன்கூட்டியே கணிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு சிறப்பான முறையில் மேற்கொண்டிருந்தது. இருப்பினும், கஜா புயலில் கோரத் தாண்டவத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி 23 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கஜா புயலின் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் கேட்டறிந்ததாகவும், தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் ட்விட்டர் மூலம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் ”கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆறுதல்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல உதவிகளைச் செய்துவரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை பாராட்டுகிறேன். நமது நிவாரண உதவிகள் தொடரட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி