ஆப்நகரம்

2021 தேர்தலில் ரஜினி 234 தொகுதிகளிலும் போட்டி? வரும் 30ஆம் தேதி முக்கிய ஆலோசனை

கட்சி தொடங்குவது குறித்து ரசிகர்களுடன் ஆலோசித்து முடிவு என ஏற்கனவே ரஜினி கூறியிருந்த நிலையில் வரும் 30ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.

Samayam Tamil 28 Nov 2020, 9:46 pm
தமிழகத்தில் அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் மாபெரும் கட்சிகளான அதிமுக, திமுக இரண்டும் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்த நிலையில் ''அரசியலுக்கு வருவது உறுதி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என கர்ஜித்த ரஜினி இன்னமும் கட்சி தொடங்காமல் இருப்பதை அனைவரும் அறிந்ததே.
Samayam Tamil rajinikanth


அண்மையில் கூட, அரசியல் கட்சி ஆரம்பித்தால் ஏற்கனவே மாற்று சிறுநீரகம் பொறுத்தப்பட்ட என் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறுவதால் இப்போது கட்சி துவங்க இயலவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறுவதாக கடிதம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி அவரது ரசிகர்களையும், தொண்டர்களையும் பரபரப்பில் ஆழ்த்தியது.

ஆனால், அந்த கடிதம் தான் எழுதவில்லை என விளக்கமளித்த ரஜினி, அதில் வந்திருக்கும் என் உடல் நிலை மற்றும் மருத்துவர்கள் எனக்கு அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிப்பேன்” என்று விளக்கமளித்தார்.

இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த், 30ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது திருமண மண்டபத்தில் நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசியல் நிலைப்பாடு குறித்து, ரஜினிகாந்த் இறுதி முடிவு எடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!

கட்சி தொடங்குவது குறித்து ரசிகர்களுடன் ஆலோசித்து முடிவு என ஏற்கனவே ரஜினி கூறியிருந்த நிலையில், 30ஆம் தேதி நடக்கவுள்ள ஆலோசனையில் தேர்தலை குறித்த முக்கிய முடிவோ அப்படி இல்லாத பட்சத்தில் கூட்டணி அமைக்கும் நிலைப்பாட்டை குறித்தோ ஒரு முடிவு எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கலாம்.

அடுத்த செய்தி