ஆப்நகரம்

கோபாலபுரத்தில் கருணாநிதி உடல்- மம்தா, ரஜினிகாந்த், திருமாவளவன் நேரில் அஞ்சலி

சென்னை கோபாலபுர இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதி உடலுக்கு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Samayam Tamil 8 Aug 2018, 12:03 am
சென்னை கோபாலபுர இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதி உடலுக்கு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Samayam Tamil karunanidhi-pays-respect
கருணாநிதி உடலுக்கு மம்தா, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் அஞ்சலி


காவேரி மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். அவரது மறைவிற்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய திமுக சார்பில், தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் அதில் பல்வேறு சட்டசிக்கல்கள் இருப்பதாக கூறி தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில் கருணாநிதியின் உடல் சென்னை கோபாலபுர இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது, அங்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், குடும்பத்தினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன்படி மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு அவர் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் எம்பி கனிமொழியை சந்தித்து பேசினார்.

தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது, பேசிய அவர் அரசியல், சமூகம், இலக்கிய துறைகளில் சாதனை செய்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரதரத்னா விருது தர வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்,

தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முத்தரசன், நடிகர் விஜயகுமார் குடும்பத்தினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி