ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஸ்ரீஹரன் என்ற முருகன் சிறையில் ஜீவ சமாதி அடைய அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்ற ஸ்ரீஹரன் என்ற முருகன் வேலூர் சிறையில் கடந்த 26 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 19ஆம் தேதி இவர் உண்ணாவிரதம் இருந்து ஜீவ சமாதி அடைவதற்கு அனுமதி கோரும் விண்ணப்பத்தை சிறை கண்காணிப்பாளர் ஜி.சண்முகசுந்தரத்திடம் கொடுத்திருக்கிறார். அதில் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து ஜீவ சமாதி அடையப்போவதாக அவர் முருகன் குறிப்பிட்டுள்ளார்.
இவரது விண்ணப்பம் காவல்துறை கூடுதல் இயக்குனர் சைலேந்திர பாபுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்ற ஸ்ரீஹரன் என்ற முருகன் வேலூர் சிறையில் கடந்த 26 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 19ஆம் தேதி இவர் உண்ணாவிரதம் இருந்து ஜீவ சமாதி அடைவதற்கு அனுமதி கோரும் விண்ணப்பத்தை சிறை கண்காணிப்பாளர் ஜி.சண்முகசுந்தரத்திடம் கொடுத்திருக்கிறார். அதில் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து ஜீவ சமாதி அடையப்போவதாக அவர் முருகன் குறிப்பிட்டுள்ளார்.
இவரது விண்ணப்பம் காவல்துறை கூடுதல் இயக்குனர் சைலேந்திர பாபுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.