ஆப்நகரம்

ராஜீவ் கொலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை திமுக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது- மு.க. ஸ்டாலின்

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளான பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுவிக்க தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 6 Sep 2018, 2:40 pm
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளான பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுவிக்க தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil mk-stalin-becomes-dmk-party-president
ராஜீவ் கொலையாளிகள் விடுதலை வழக்கு: மு.க. ஸ்டாலின் கருத்து


ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும், அதற்கான பரிந்துரையை தமிழக ஆளுநரிடம் அளிக்க கூறியது.

இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்யலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்தார்.



மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையைக் கூட்டி ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரின் விடுதலையில் உடனடி முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்தவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

குட்கா புகாரை முதன்முதலாக சட்டப்பேரவையில் எழுப்பியது திமுக தான். இந்த வழக்கின் தொடர்புடைய டிஜிபி ராஜேந்திரன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை உடனடியாக பதவி விலக வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.

அடுத்த செய்தி