ஆப்நகரம்

விடுதலை குறித்து முடிவெடுக்காத, மத்திய உள்துறை செயலர் மீது நளினி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

உள்துறை செயலர் மீது நளினி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

Samayam Tamil 5 May 2018, 7:50 am
சென்னை: உள்துறை செயலர் மீது நளினி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
Samayam Tamil Nalini
நளினி விடுதலை வழக்கு


ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருப்பவர் நளினி. இவர் 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை, மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார்.

அதில் நீண்ட காலமாக சிறையில் இருக்கும் தன்னை, அரசியல் அமைப்பு சட்டம் 161ன்படி விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435ன்படி சி.பி.ஐ விசாரணை நடத்தியதால் ஆயுள் தண்டனை பெற்றவர்களை மட்டும் விடுதலை செய்ய முடியாது என்கிறது.

இது தவறானது என்று குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் நளினியை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்பதாக நீதியரசர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வழக்கில் மத்திய அரசு தான் நளினி விடுதலை குறித்து தீர்மானிக்கும் என்று கூறி, மத்திய உள்துறை செயலருக்கு உத்தரவிட்டது. இதுதொடர்பான முடிவை மூன்று மாதங்களில் முடிவெடுக்க தெரிவித்திருந்தது.

ஆனால் 3 மாதங்கள் கழிந்தும் நடவடிக்கை எடுக்காததால், மத்திய உள்துறை செயலர் மீது நளினி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

Rajiv Gandhi assassination convict Nalini’s counsel issues contempt notice to Union home secretary.

அடுத்த செய்தி