ஆப்நகரம்

நளினியை முன்கூட்டியே விடுவிக்க முடியாது; உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நளினியை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

TNN 15 Nov 2017, 3:04 pm
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நளினியை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil rajiv gandhi case accust nalini wont be released says tn govt
நளினியை முன்கூட்டியே விடுவிக்க முடியாது; உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!


ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பதை கருதி, மனிதாபிமான அடிப்படையில் தன்னை விடுவிக்க உத்தரவிடக் கோரி, நளினி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அதில் 24 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தால், அவர்களை உடனடியாக விடுவிக்கலாம் என்று அரசாணை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதற்கு உரிய பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில் உள்துறை துணை செயலாளர் தேவாசீர்வாதம் உயர்நீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் நளினியை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rajiv Gandhi Case accust Nalini wont be released says TN Govt.

அடுத்த செய்தி