ஆப்நகரம்

ஒருபுறம் நளினி, மறுபுறம் முருகன் - போராட்டக் களமான வேலூர் சிறை- மயங்கி விழுந்ததால் பதற்றம்!

வேலூர் சிறையில் தண்டனை பெற்று வரும் முருகன், உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக மயங்கி விழுந்துள்ளார்.

Samayam Tamil 3 Nov 2019, 8:28 am
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் வேலூர் மத்திய சிறையில் முருகனும், பெண்கள் சிறையில் நளினியும் அடைக்கப்பட்டு உள்ளனர்.
Samayam Tamil Murugan


இந்த சூழலில் தன்னை விடுதலை செய்யக் கோரி, 8வது நாளாக நளினி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் சிறையில் முருகனின் அறையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் செல்போன் கைப்பற்றப்பட்டது. இதன் காரணமாக அவருக்கு அனைத்து சிறை சலுகைகளும் ரத்து செய்யப்பட்டன.

வெள்ளத்தில் களமிறங்கிய எம்பி கனிமொழி!

இதையடுத்து முருகனை தனி அறைக்கு மாற்றம் செய்தனர். இதனைக் கண்டித்து முருகன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது போராட்டம் 16வது நாளை எட்டியுள்ளது.

இதனால் முருகனின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதையொட்டி முருகன், நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி இருவரையும் சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முருகனின் கோரிக்கை இதுதான்.

குளவியால் உயிரிழந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ..?

தன்னை தனி அறையில் இருந்து மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சாப்பிடாமல் போராடி வருகிறார். அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். ஆனால் அவரை பார்க்க வந்த மருத்துவர்கள் எந்தவித பரிசோதனையும் செய்யாமல் சென்று விட்டதாக குற்றம்சாட்டினார்.

தனது அறையில் செல்போன் கைப்பற்றப்பட்டதாக பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து போராடி தான் குற்றம் அற்றவன் என்று நிரூபிப்பேன் என்று கூறியதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையினர் அத்துமீறல்..! எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது..!

அடுத்த செய்தி