ஆப்நகரம்

7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் சாதகமான முடிவு எடுப்பார்: அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை செய்யப்படுவர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Samayam Tamil 15 Sep 2018, 11:06 am
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை செய்யப்படுவர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Samayam Tamil Jayakumar


பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலை குறித்து அமைச்சரவை முடிவு எடுத்தது எடுத்தது தான். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழர்கள் விரும்பும் நடவடிக்கையை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். திமுக நினைத்திருந்தால் ஒன்றரை கோடி தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். இதைத் தான் ராஜபக்சே கூறியிருக்கிறார்.

இந்திய அரசின் உதவியுடன் தான் தமிழர்கள் கொல்லப்பட்டதாக அவர் கூறுவது உண்மை தான். அன்றைய காங்கிரஸ், திமுக அரசாங்கம் தமிழர்கள் படுகொலையைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அண்ணா பிறந்த நாள் - முக ஸ்டாலின் மெரினாவில் மரியாதை

நேற்று, இன்று, நாளை என வெவ்வேறான முடிவுகளை எடுப்பவர்கள் தான் திமுக. காங்கிரஸ் கட்சிக்குள்ளே வெவ்வேறான கருத்துகள் நிலவி வருகின்றன. ஏனெனில் 7 பேர் விடுதலை குறித்து அகில இந்திய அளவில் ஒரு முடிவும், தமிழக அளவில் வேறு முடிவு எடுக்கிறார்கள்.

இதற்கு ஸ்டாலின் ஏதாவது பேசினாரா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

Rajiv Gandhi Case Convicts will be released as per the cabinet decision says Minister Jayakumar.

அடுத்த செய்தி