ஆப்நகரம்

பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு திரும்பிய நளினி- நிராசையான மகளின் திருமணம்!

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, மகளின் திருமணத்துக்காக கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி வேலூர் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார். ஆனால் மிகவும் எதிர்பார்த்த வந்த மகளின் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் 51 நாட்கள் பரோல் முடிந்ததால் நளினி மீண்டும் வேலுார் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Samayam Tamil 16 Sep 2019, 11:11 am
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியின், 51 நாள் பரோல் முடிந்ததால் அவர் நேற்று மாலை மீண்டும் வேலுார் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Samayam Tamil பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு திரும்பிய நளினி- நிராசையான மகளின் திருமணம்!
பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு திரும்பிய நளினி- நிராசையான மகளின் திருமணம்!


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள அவரது கணவர் முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நளினி-முருகனின் மகள் ஹரித்ரா என்ற மேகரா தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.

தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக தனக்கு 6 மாத பரோல் வழங்குமாறு கோரி நளினி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையைத் தொடர்ந்து, நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்று 74வது பிறந்த நாளைக் கொண்டாடும் ப.சிதம்பரத்திற்கு இப்படியொரு சோகம்!

இதனைத் தொடர்ந்து நளினி வேலூர் பெண்கள் சிறையில் இருந்து கடந்த ஜூலை 25ல் வெளியே வந்தார். அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கக் கூடாது, ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் வெளியே வந்த நளினி, வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் ஒருமாதம் நீடிக்குமாறு அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதன்படி அவருக்கு மேலும் 3 வாரங்கள் பரோல் நீட்டிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு நீட்டிப்பு செய்யப்படவில்லை.

5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு… எட்டாக் கனியாகும் கல்வி- ஸ்டாலின் கடும் சாடல்!

இந்நிலையில், பரோல் காலம் முடிந்ததை அடுத்து, சத்துவாச்சாரி வீட்டில் இருந்த நளினியை நேற்று மாலை, 4:30 மணிக்கு போலீசார் பலத்த பாதுகாப்போடு வேலுார் மகளிர் சிறைக்கு, அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனைக்கு பின், நளினி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

மிகவும் எதிர்பார்த்து வந்த மகளின் திருமணம் நடைபெறாத சோகத்துடன் நளினி மீண்டும் சிறைக்கு சென்றதை பார்த்த உறவினர்கள், அவரை கண்ணீரோடு வழியனுப்பி வைத்தனர்.

ஒருநாள் ஒரு பொழுதாவது விடியும்- தொண்டர்களை உற்சாகமூட்டி விஜயகாந்த் பேச்சு!

அடுத்த செய்தி