ஆப்நகரம்

7 பேர் விடுதலையில் ஜெயலலிதா நாடகம் : அன்புமணி சாடல்

நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையில் தமிழக அரசு நாடகமாடுவதாக பா.ம.க வின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

TNN 4 Mar 2016, 2:44 pm
கோவை : நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையில் தமிழக அரசு நாடகமாடுவதாக பா.ம.க வின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil rajiv murder suspect to release anbumani ramadoss condems admk
7 பேர் விடுதலையில் ஜெயலலிதா நாடகம் : அன்புமணி சாடல்


அகில இந்திய பேட்மிட்டன் போட்டி பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் கோவைக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுவிப்பதில் தமிழக அரசு நாடகமாடுகிறது என்றும், தேர்தல் சமயங்களில் இப்படி நாடகமாடுவதை ஜெயலலிதா வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் , சட்டப்பிரிவு 161ன் கீழ், 7 பேரை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரமிருந்தும், அதை செய்யாமல் நாடகம் ஆடுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி