ஆப்நகரம்

7 பேர் விடுதலை; மத்திய அரசு சரியான முடிவெடுக்கும்: பொன்.ராதா

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான சரியான முடிவை மத்திய அரசு எடுக்கும் என சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி தெரிவித்துள்ளார்.

TNN 3 Mar 2016, 9:05 am
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான சரியான முடிவை மத்திய அரசு எடுக்கும் என சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil rajiv murderers 7 members release pon radha comments
7 பேர் விடுதலை; மத்திய அரசு சரியான முடிவெடுக்கும்: பொன்.ராதா


ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், அவர்களை விடுதலை செய்ய, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. எனவே, இவ் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு பற்றி உடனே தெரிவிக்கும்படி தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான சரியான முடிவை மத்திய அரசு எடுக்கும் என்றார்.

இதுகுறித்த வழக்கில், இறுதி முடிவு செய்யும் பொறுப்பு மத்திய அரசுக்கே உள்ளதாகவும், தமிழக அரசு தனிப்பட்ட முடிவு எடுக்க முடியாது எனவும் இதுகுறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி