ஆப்நகரம்

ஜெ., மரணம் தொடர்பான விசாரணை கமிஷன்; ராம மோகன ராவிடம் 4 மணி நேரம் தீவிர விசாரணை!

ஜெயலலிதா விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜராகி, உரிய பதில் அளித்ததாக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் தெரிவித்துள்ளார்.

TNN 21 Dec 2017, 5:22 pm
சென்னை: ஜெயலலிதா விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜராகி, உரிய பதில் அளித்ததாக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ram mohana rao answered all questions regarding jaya case
ஜெ., மரணம் தொடர்பான விசாரணை கமிஷன்; ராம மோகன ராவிடம் 4 மணி நேரம் தீவிர விசாரணை!


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைபாடு காரணமாக, கடந்த ஆண்டு காலமானார்.

அவரது இறப்பு குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சசி, ஜெயலலிதா குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது, தலைமை செயலாளராக இருந்த ராமமோகன ராவ் விசாரணைக் கமிஷனில் இன்று ஆஜரானார்.

அவரிடம் 4 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா தொடர்பான அனைத்து கேள்விகளுக்கு பதில் அளித்ததாக குறிப்பிட்டார்.

Ram Mohana Rao answered all questions regarding Jaya Case.

அடுத்த செய்தி