ஆப்நகரம்

வீடு திரும்புகிறார் ராம மோகன ராவ் : விசாரணை தீவிரப்படுத்த ஐ.டி அதிகாரிகள் முடிவு

நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த ராம மோகன ராவ் இன்று வீடு திரும்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNN 26 Dec 2016, 12:29 pm
சென்னை : நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த ராம மோகன ராவ் இன்று வீடு திரும்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil rama mohana rao discharge from hospital
வீடு திரும்புகிறார் ராம மோகன ராவ் : விசாரணை தீவிரப்படுத்த ஐ.டி அதிகாரிகள் முடிவு


தமிழக தலைமை செயலாளாராக இருந்த ராம மோகன ராவின் வீட்டில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற வருமான வரி சோதனையில்,பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.ராம மோகன ராவின் மகனான விவேக், பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்வு செய்ததை ஒப்புக் கொண்டனர்

இதனைத் தொடர்ந்து தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் இடைநீக்கம் செய்யப்பட்டார்.அவருக்கு பதிலாக கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 24-ம் தேது காலை திடீரென ராம மோகன ராவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் அவர் இன்று அவசர சிகிச்சைப்பிரிவில் இருந்து ராமசந்திரா மருத்துவமனையில் மாடியில் உள்ள அறை எண் 1,703 சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் இன்று வீடு திரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராம மோகன ராவ் வீடு திரும்பியது அவரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த வருமான வரிதுறையில் முடிவு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. ராவ்விடம் விசாரணை நடத்தும் போது பல அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் சிக்குவார்கள் என ஏதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி