ஆப்நகரம்

இனியும் தாமதிக்காதீர். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிப்பீர்: ராமதாஸ்

இனியும் தாமதிக்காதீர். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிப்பீர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

TNN 12 Jan 2017, 1:38 pm
சென்னை: இனியும் தாமதிக்காதீர். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிப்பீர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil ramadoss asks central govt to create immediate law for jallikattu
இனியும் தாமதிக்காதீர். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிப்பீர்: ராமதாஸ்


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்கனவே தெரிவித்த சில கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும் போது, அவர்கள் நிச்சயம் தமிழகத்திற்கு சாதகமாக இருக்க மாட்டார்கள் என்பது ஏற்கனவே தெரியும். அதனால் இத்தீர்ப்பு அதிர்ச்சியோ, வியப்போ அளிக்கவில்லை. எனவே தான் உச்சநீதிமன்றத்தைப் பற்றிக் கவலைப்படாமல், காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில் ஜல்லிக்கட்டுக்காக அவசரச்சட்டம் பிறப்பிக்க முடியாது என்று கூறியிருப்பது தான் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது.

எனவே, சாக்குப்போக்கு கூறாமல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வசதியாக அவசரச் சட்டத்தை உடனடியாக பிறப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதையும், அதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிப்பதையும் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Ramadoss asks central govt to create immediate law for jallikattu.

அடுத்த செய்தி