ஆப்நகரம்

கமல் பேசிட்டாரு - நாளைக்கு காவிரி நீர் வந்திடும்; குமாரசாமி சந்திப்பு குறித்து ராமதாஸ் கிண்டல்!

கர்நாடக முதல்வர் உடனான சந்திப்பு குறித்து, ராமதாஸ் கிண்டல் செய்துள்ளார்.

Samayam Tamil 4 Jun 2018, 3:33 pm
சென்னை: கர்நாடக முதல்வர் உடனான சந்திப்பு குறித்து, ராமதாஸ் கிண்டல் செய்துள்ளார்.
Samayam Tamil Kamal Haasan


மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை இன்று சந்தித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கமல் ஹாசன், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தினேன்.

திருப்திகரமான பதில் கிடைத்துள்ளது. கட்சி தலைவராக, கலைஞனாக இங்கு வரவில்லை. மக்கள் பிரதிநிதியாக வந்துள்ளேன். விவசாயிகளின் நலன் மிக முக்கியம். இன்றைய சந்திப்பிற்கு பின், ஆணைய உத்தரவுப்படி இரு மாநிலங்களும் செயல்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

காவிரி தான் முக்கியம். காலா பிரச்சனைக்காக வரவில்லை என்று கமல் ஹாசன் கூறினார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், காவிரி பாசன விவசாயிகள் கவனத்திற்கு...

காவிரி சிக்கல் குறித்து கர்நாடக முதலமைச்சருடன் கமல் ஹாசன் இன்று பேச்சு நடத்துகிறாராம். அநேகமாக நாளை அல்லது அதற்கு மறுநாள் காவிரியில் தண்ணீர் வந்து விடும் என்பதால் குறுவைப் பாசனத்திற்கு தயாராக இருக்கவும் என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

Ramadoss mocks MNM leader Kamal Haasan meet with Kumaraswamy.

அடுத்த செய்தி