ஆப்நகரம்

உள்ளாட்சிகளில் அதிகாரிகள் ஆட்சி கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

உள்ளாட்சிகளில் அதிகாரிகள் ஆட்சி கூடாது என்றும், மக்களாட்சியே வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

TNN 3 Jan 2017, 2:31 am
சென்னை: உள்ளாட்சிகளில் அதிகாரிகள் ஆட்சி கூடாது என்றும், மக்களாட்சியே வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil ramadoss statement says local body should be democratic
உள்ளாட்சிகளில் அதிகாரிகள் ஆட்சி கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் மக்கள் நலப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு தனி அதிகாரி பல உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க வேண்டியிருப்பதால் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது குறித்து அவர்களால் உடனடியாக முடிவெடுக்க முடியவில்லை.

உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களின் தேவைகளை அவர்களே நிறைவேற்றிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டனவே தவிர, அதிகாரிகள் ஆட்சி செய்ய ஏற்படுத்தப்படவில்லை. இதை உணர்ந்து மார்ச் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மாநிலத் தேர்தல் ஆணையம் ஆட்சியாளர்களின் தலையீடின்றி செயல்பட வசதியாக அவற்றை இந்திய தேர்தல் ஆணையத்துடன் தமிழக அரசு இணைக்க வேண்டும்.

Ramadoss statement says Local Body should be democratic.

அடுத்த செய்தி