ஆப்நகரம்

ஐஎஸ்ஐஎஸ்கூட தொடர்பா? சந்தேகத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது!

ராமநாதபுரம் அருகே தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாகச் சந்தேகத்தில் 3 பேர் கைது, முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர் தப்பி ஓட்டம் எனத் தகவல்.

Samayam Tamil 22 Jan 2020, 11:03 pm
ராமநாதபுரம் மாவட்டம் தேவி பட்டினத்தில் உள்ள தனியார்ப் பள்ளி மைதானம் அருகே சந்தேகத்திற்கிடமாக 4 பேர் பேசிக்கொண்டிருந்ததாக மாவட்ட காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது.
Samayam Tamil ISIS-Khurasan


இதனையடுத்து சார்பு ஆய்வாளர் ஜெகதீஸ்வரன் தலைமையில் காவல் துறையினர் அங்குச் சென்றனர். காவல் துறையைக் கண்டதும் தப்பி ஓட முயன்ற 4 பேரில் 3 பேரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் பெயர் புறாக்கனி என்ற பிச்சைக்கனி, அமீர், முஹமது அலி எனவும், ஷேக் தாவூத் என்பவர் தப்பியோடியதும் தெரிந்தது. கலியக்காவிளை சிறப்புச் சார் ஆய்வாளர் வில்சன் கொலையில் தொடர்புடைய அப்துல் சமீமுக்கு பணம் பரிமாற்றம் செய்தது தொடர்பாகவும், தாங்கள் சார்ந்துள்ள இயக்கத்திற்கு ஆட்கள் சேர்க்க உதவிய முகமது ரிபாஸ் குறித்தும் 4பேரும் கூடி விவாதித்தது விசாரணையில் தெரிந்தது.

அதிமுகவை பாராட்டிய துரைமுருகன், நித்யானந்தாவுக்கு வலைவீசும் இன்டர்போல்....இன்னும் பல முக்கியச் செய்திகள்...

ஜனநாயகத்திற்கு எதிராக ஆட்களைத் திரட்டி தேவி பட்டினம், கீழதில்லையேந்தல் மதரஸாக்களில் பயிற்சி அளிப்பது குறித்து விவாதித்துக் கொண்டிருந்ததும் தெரிந்தது. அவர்களிடமிருந்து ஜிகாத், ஜனநாயகம் ஒரு சூப்பர் ஆகிய இஸ்லாமிய மார்க்க புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் 3 செல்போன்களை பறிமுதல் செய்த காவலர்கள், அவர்கள் அங்கம் வகிக்கும் வாட்ஸ் அப் குழுக்களில் பிற இஸ்லாமிய இயக்கங்கள் குறித்து அவதூறு தகவல் பரப்பியது கண்டறியப்பட்டது. இவர்கள் 3 பேர் மீதும் 9 பிரிவுகளின் கீழ் தேவி பட்டினம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நைட்டி அணிந்து கொண்டு நடு ராத்திரியில் வரும் சைக்கோ..! என்ன நடக்கிறது தெரியுமா?

தப்பி ஓடிய சேக்தாவூத் மீது என்ஐஏ வழக்கு உள்ளது. பல தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது எனவும் தீவிரவாதிகளின் திட்டத்தைச் செயல்படுத்தத் தமிழ்நாடு, கேரளா பகுதிகளில் ஆள் தேர்வு பணியை சேக் தாவூத் மேற்கொண்டு வந்ததாகவும் காவல் துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

அடுத்த செய்தி