ஆப்நகரம்

நடுக்கடலில் உயிரை காப்பாற்ற 10 மணி நேரம் போராடிய தமிழக மீனவர்- திக் திக் நிமிடங்கள்..!!

மங்களூர் கடற்பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற போது படகிலிருந்து தவறி விழுந்த தமிழக மீனவர் ஒருவர் பத்து மணி போராட்டத்திற்கு பிறகு ஈரானிய சரக்கு கப்பல் மாலுமிகளால் மீட்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 22 Aug 2018, 12:23 pm
மங்களூர் கடற்பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற போது படகிலிருந்து தவறி விழுந்த தமிழக மீனவர் ஒருவர் பத்து மணி போராட்டத்திற்கு பிறகு ஈரானிய சரக்கு கப்பல் மாலுமிகளால் மீட்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil nagarajan_fishermen
நடுக்கடலில் 10 மணிநேரம் தத்தளித்து உயிர்பிழைத்த தமிழக மீனவர்


இந்த சம்பவம் குறித்து பேசிய மீனவர் நாகராஜன், ராமநாதபுரத்தை சேர்ந்த எனக்கு சிறுவயது முதலே மீன் பிடி தொழில் தான். ஆனால் மங்களூர் கடற்பகுதியில் மீன் பிடிக்கச் சென்றது இது தான் முதல் முறை.

கடந்த வியாழன் அன்று 50 மீனவர்களுடன் நானும் இழுவைப் படகில் மங்களூர் கடற்பகுதிக்கு சென்றேன். அங்குள்ள குட்லா என்ற இடத்தில் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, படகிலிருந்து தவறி விழுந்தேன்.

இதை என்னுடன் வந்த மீனவர்கள் யாருக்கும் தெரியவில்லை. அனைவரும் என்னை அங்கேயே விட்டு விட்டுச்சென்றனர். காலை 6 மணியளவில் கடலில் விழுந்த நான் மாலை 4 மணி வரை நீந்துக்கொண்டே இருந்தேன்.

அப்போது ஒரு ஈரானிய சரக்கு கப்பல் அந்த வழியாக வந்தது. அதற்கு சமிக்ஞை காட்டிய உடன் என்னை அதிலிருந்த மாலுமிகள் மீட்டனர். பிறகு மங்களூர் பகுதி கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மங்களூருக்கு கொண்டு வந்த என்னை, அங்கியிருந்த அதிகாரிகள் உதவி செய்து ராமநாதபுரத்திற்கு அனுப்பி வைத்தனர் என்று தனது அனுபவங்கள் கூறி முடித்தார் மீனவர் நாகராஜன்.

சுமார் 10 மணி நேரம் கடலில் தத்தளித்த நிலையில் மீனவர் நாகராஜனுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் தங்கி அவர் ஓய்வெடுத்து வருகிறார்.

அடுத்த செய்தி