ஆப்நகரம்

போலீஸ் பாராட்டும் ஹீரோ... அப்படி என்ன செய்தார் தெரியுமா!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாடகை வாகனத்தில் தொலைத்த ஏழரை சவரன் தங்க சங்கிலியைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநரை போலீசார் பாராட்டினர்.

Samayam Tamil 27 Feb 2020, 10:44 am
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் சீனி பிச்சை. இவர் வாடகைக்கு வாகனங்களை விடுவது வழக்கம். பரமக்குடி அருகேயுள்ள மகிண்டியிலிருந்து அருப்புக்கோட்டைக்குத் திருமண நிகழ்ச்சிக்குத் தனது வாகனத்தை வாடகைக்கு அனுப்பியுள்ளார்.
Samayam Tamil WhatsApp Image 2020-02-26 at 9.13.11 PM.


வாகனத்தை மணிகண்டன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். காலை அருப்புக்கோட்டை சென்றுவிட்டு, மீண்டும் சொந்த ஊரில் ஆட்களை இறக்கிவிட்டு, மணிகண்டன் வாகனத்தை வீட்டிற்குக் கொண்டு வந்துள்ளார். இறுதியாக வாகனத்தைச் சோதனையிட்ட போது வாகனத்தில் ஒரு சங்கிலி கேட்பாரற்று கிடந்துள்ளது.

உடனடியாக, மணிகண்டன் வாகனத்தில் கிடந்த சங்கிலி குறித்து தனது உரிமையாளருக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதைக் கேட்டறிந்த உரிமையாளர் செயினை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கும்படி உரிமையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

27 பேர் பலி... ஆனாலும் டெல்லி முதல்வரின் கோரிக்கைக்கு 'நோ' சொன்ன மத்திய அரசு!!

இதையடுத்து போலீஸ் ஸ்டேஷன் சென்ற மணிகண்டன் அங்கு பணியிலிருந்த எஸ். ஐ., சாரதாவிடம் சங்கிலியை ஒப்படைத்துள்ளார். சங்கிலியை பெற்ற போலீசார் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.


இதற்கிடையே வாடகை வாகனத்தில் பயணம் செய்தபோது கருப்பாயி என்பவர் தனது ஏழரை சவரன் தங்க செயினை காணவில்லை என போலீஸில் புகார் செய்திருந்திருக்கிறார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் ஓட்டுநர் மணிகண்டன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த சங்கிலி, காணாமல் போன கருப்பாயிக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

இதையடுத்து ஏழரை சவரன் தங்கச் சங்கிலியை போலீசார் கருப்பாயிடம் ஒப்படைத்தனர். வாடகை வாகனத்தில் தொலைத்த சங்கிலியை மீட்டு, பத்திரமாக போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த ஓட்டுநர் மணிகண்டனை, சார்பு ஆய்வாளர் சாரதா உள்ளிட்ட போலீசார் சால்வை அணிவித்துப் பாராட்டினர்.

அடுத்த செய்தி