ஆப்நகரம்

கத்தார்: சோறு இல்லை, கழிவறையில் கட்டி வைத்து தமிழர் சித்திரவதை...

அரபு நாடான கத்தார் நாட்டில் உணவின்றி தவிக்கும் மகனை மீட்டுத்தரக்கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தாய் கண்ணீர் மல்க மனு அளித்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Samayam Tamil 3 Mar 2020, 4:33 pm
ராமநாதபுரம் மாவட்டம் உசிலங்காட்டுவலசை பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன் என்பவரின் மனைவி பஞ்சவர்ணம். இவர் உசிலங்காட்டுவலசை ஊராட்சித் தலைவர் கண்ணம்மாள் மருங்கப்பன் தலைமையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு உறவினர்கள், கிராமத்தினருடன் வந்து கண்ணீர் மல்க மனு அளித்தார்.
Samayam Tamil Untitled


அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது மகன் செல்வராஜ் (வயது23). டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த நவம்பர் மாதம் கத்தார் நாட்டுக்கு டிரைவர் வேலைக்கு சென்றார். அங்கு தனியார் பள்ளியில் வாகன டிரைவராக பணியில் சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
பள்ளி விடுமுறை சமயத்தில் தனியார் ஒருவரிடம் டிரைவராக மாற்று பணிக்கு சென்றுள்ளார். அப்போது வழிதெரியாமல் திசை மாறி சென்றுவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த கார் உரிமையாளர் எனது மகனை கண்டித்ததுடன் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

முதல்வர் பந்தபோஸ்த் கைக்குழந்தையுடன் வந்த பெண் போலீஸ்... பணிச் சுமையா..?

ஊதியம் எதுவும் தராமல் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை வைத்துக்கொண்டு காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார். பாஸ்போர்ட்டை முடக்கி வைத்துவிட்டதால், எனது மகன் அங்கிருந்து வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கழிவறையிலேயே பூட்டி வைத்து 3 மாதமாக கொத்தடிமை போன்று கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இதன்பின்னர் அங்கிருந்து தப்பித்து வெளியில் வந்து கத்தார் நாட்டில் வேறு வேலைக்குச் செல்ல முடியாமலும் சொந்த ஊருக்கு வரமுடியாமலும் அங்கேயே சுற்றி திரிந்துள்ளார். இதனிடையே அங்குள்ள நண்பர் ஒருவர் மீட்டுக் கடந்த ஒருமாதமாக உதவி செய்து தங்க வைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாட்ஸ்-அப்பில் தனது நிலைமையை விளக்கி வீடியோ வெளியிட்டுள்ளார்.அதனை பார்த்துத்தான் எனது மகனின் நிலை குறித்து அறிந்து கொண்டேன். உணவுக்குக் கூட வழியின்றி சொந்த ஊருக்கு வர முடியாமல் தவித்து வரும் எனது மகனை உடனடியாக மீட்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் கணவன், மனைவியை மாற்றிக்கொள்ளும் கலாசாரம்? ஈசிஆர் சாலை அட்டூழியம்

இந்த மனு இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக பஞ்சவர்ணம் வெளியிட்ட வீடியோ, கண் கலங்கச் செய்து விடுகிறது.

அடுத்த செய்தி