ஆப்நகரம்

"இராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டம்":போராட்டத்தில் குதிக்க மக்கள் முடிவு..!

இராமநாதபுரம் மாவட்டத்தில் 22 இடங்களில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து அம்மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர்.

TNN 1 Mar 2017, 1:05 pm
இராமநாதபுரம் மாவட்டத்தில் 22 இடங்களில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து அம்மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர்.
Samayam Tamil ramanathapuram people oppossed hydrocarbon scheme in thier district
"இராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டம்":போராட்டத்தில் குதிக்க மக்கள் முடிவு..!


தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உட்பட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்க சமீபத்தில் மத்திய அரசு அனுமதி அளித்தது.ஆனால் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நெடுவாசல் மக்கள்,இந்த திட்டம் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனக்கூறி 14-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டையின் அண்டை மாவட்டமான இராமநாதபுரத்தில் உள்ள 22 இடங்களில்,ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த ஆய்வுப் பணிகள் பல மாதங்களுக்கு முன்னரே துவங்கி,தற்போது முடியும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நெடுவாசல் மக்கள் போராட்டம் மூலம் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக,இராமநாதபுர மாவட்ட மக்களும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க துவங்கியுள்ளனர்.மேலும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில்,நெடுவாசல் போல போராட்டத்தில் ஈடுபடவும் அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

Ramanathapuram people oppossed Hydrocarbon scheme in thier district

அடுத்த செய்தி