ஆப்நகரம்

சூழியலுக்கு பாதிப்பில்லாத நிலங்களில் மட்டுமே வீட்டு மனைகளை அனுமதிக்க வேண்டும்-ராமதாஸ் வலியுறுத்தல்..!

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத நிலங்களில் மட்டுமே வீட்டு மனைகளை உருவாக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

TNN 7 Oct 2016, 12:13 pm
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத நிலங்களில் மட்டுமே வீட்டு மனைகளை உருவாக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil ramdoss urged tamilnadu government to form a clear rules and regulations for real estate
சூழியலுக்கு பாதிப்பில்லாத நிலங்களில் மட்டுமே வீட்டு மனைகளை அனுமதிக்க வேண்டும்-ராமதாஸ் வலியுறுத்தல்..!


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வேளாண் விலைநிலங்களை வீட்டடி மனைகளாக மாற்றுவதாலும்,ஆங்கீகரிக்கப்படாத வீட்டடி மனைகளில் வீடுகள் கட்டுவதாலும்,சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.மழைக்காலங்களில் வெள்ள பாதிப்புகளும் ஏற்படுகின்றன என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எனவே தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் மற்றும் அவற்றில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதேபோல் வேளாண் விளை நிலங்களை,வீட்டடி மனைகளாக மாற்றுவதற்கும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த தீர்ப்பு சிறப்பான ஒன்று என்றாலும் இது தெளிவானதாக இல்லை.இதனால் நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்கள் தங்கள் நிலங்களை அவசரத் தேவைக்கு கூட விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்யப்படாத நிலங்களை வீட்டடி மனைகளாக மாற்றுவதால்தான்,வெள்ளக்காலங்களில் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன.எனவே இதனை தடுக்கும் வகையில் தெளிவான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தெரிவிப்பதையே உயர்நீதிமன்றமும் கூறியுள்ளது.எனவே இந்த தீர்ப்பை எந்த வித சமரசமும் இன்றி முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும். அதே நேரத்தில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் அனைத்தையும்,ஆய்வு செய்து,அவற்றில் எவை சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்தாதோ,அவற்றுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary:

Ramdoss urged Tamilnadu government to form a clear rules and regulations for real estate

அடுத்த செய்தி