ஆப்நகரம்

மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்!

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Samayam Tamil 31 Mar 2018, 10:18 am
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டம்!
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டம்!


தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும். கைது செய்வதும் தொடர்கதையாக வருகிறது. குறிப்பாக ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை கச்சத்தீவு பகுதியில் மின் பிடிக்க முடியாத அளவுக்கு இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மார்ச் 26ஆம் தேதி, ராமேஸ்வரம் மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில் இலங்கை சிறைகளில் 100 நாட்களுக்கும் மேலாக இருக்கும், 27 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், தமிழகம், புதுச்சேரி மீனவர்களின் 184 விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும், மேலும் குந்துகாலில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என நான்கு அம்ச தீர்மானங்களை வலியுறுத்தி, வரும் 31ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக மீனவர்கள் அறிவித்தனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று காலை முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மீனவர்களுக்கு ஆதரவாக போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி