ஆப்நகரம்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.

Samayam Tamil 24 Mar 2019, 10:16 am
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.
Samayam Tamil கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 11 பேர் கைது
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 11 பேர் கைது


ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

கைதான மீனவர்களை இலங்கையின் காங்கேசன்துறை முகாமுக்கு விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 8 தமிழக மீனவர்கள் நேற்று முன்தினம் நாடு திரும்பிய நிலையில், 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

அடுத்த செய்தி