ஆப்நகரம்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்!

ராமேஸ்வரத்தில் இருந்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று கடலுக்குச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் திடீரென ராமேஸ்வர மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Jan 2019, 12:27 pm
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்!
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்!


ராமேஸ்வரத்தில் இருந்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று கடலுக்குச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் திடீரென தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில், பாம்பன் ரியான் என்பவரின் படகில் இருந்த வலைகள், ஜிபிஎஸ் கருவிகள் சேதமடைந்தன. இதில் காயமடைந்த ரியான் மீன்பிடிக்க முடியாமல், ராமேஸ்வரத்துக்குத் திரும்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேபோல் நூற்றுக்கு மேற்பட்ட படகுகளில் இருந்த மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பினர். சமீப காலமாக தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தும் அதிகரித்து வரும் நிலையில், இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி மீன்பிடிப்பதற்குப் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி