ராமேஸ்வரம் நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில், மாயமான எட்டு மீனவர்களில் நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ராமேஸ்வரம் நடராஜபுரம் மீனவர் பகுதியை சேர்ந்த முனியசாமி, ரஞ்சித், மதன், இளங்கோவன், தரக்குடியான், காந்தகுமார், செந்தில்வேல், முனீஸ்வரன், உமாகாந்த், காளிதாஸ் ஆகிய 10 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி, புதிய படகு வாங்குவதற்காக கடலூருக்கு சென்றனர்
அங்கு செவ்வாய்க்கிழமை நாட்டுப் படகை வாங்கிக் கொண்டு, அங்கிருந்து கடல் வழியாக ராமேஸ்வரம் நோக்கி வந்தனர்.
சிபிஐ அடுத்து அமலாக்கத்துறை வசம் ப.சிதம்பரம்- ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் மறுப்பு!
அன்று மாலை தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம் கரையில் இருந்து 30 கி.மீட்டர் துாரத்தில் வந்த போது கடலில், பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் மீனவர்களின் படகு, திடீரென ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 10 மீனவர்களும் கடலில் மூழ்கினர்.
செந்தில்வேல், காளிதாஸ், ஆகிய இருவரும் படகிலிருந்த மிதவை மற்றும் டயரின் உதவியுடன் உயிர் தப்பி, மல்லிப்பட்டினம் மீன்படி துறைமுகத்துக்கு வந்தனர். அங்கிருந்த மீனவர்கள் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக மல்லிபட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தமிழிசை சவுந்தரராஜன்: தெலங்கானா ஆளுநராக பதவியேற்க ரெடி; அதுல தமிழிசைக்கு இப்படியொரு சிக்கல்!
மாயமான மற்ற 8 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் அவர்களை தேடும் பணியில், கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, மல்லிப்பட்டினம் அருகே நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த முனீஸ்வரன், ரஞ்சித் குமார், சரக்குடியான், முனியசாமி ஆகிய 4 மீனவர்கள் தீவிர தேடுதலுக்கு பின் உயிருடன் மீட்டனர். மேலும் மாயமான 4 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்திய பெண்ணும், பாக்., பெண்ணும் அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கை திருமணம் - வைரலாகும் புகைப்படங்கள்...!
கடலில் மூழ்கி இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியதால், மீனவர்களின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
ராமேஸ்வரம் நடராஜபுரம் மீனவர் பகுதியை சேர்ந்த முனியசாமி, ரஞ்சித், மதன், இளங்கோவன், தரக்குடியான், காந்தகுமார், செந்தில்வேல், முனீஸ்வரன், உமாகாந்த், காளிதாஸ் ஆகிய 10 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி, புதிய படகு வாங்குவதற்காக கடலூருக்கு சென்றனர்
அங்கு செவ்வாய்க்கிழமை நாட்டுப் படகை வாங்கிக் கொண்டு, அங்கிருந்து கடல் வழியாக ராமேஸ்வரம் நோக்கி வந்தனர்.
சிபிஐ அடுத்து அமலாக்கத்துறை வசம் ப.சிதம்பரம்- ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் மறுப்பு!
அன்று மாலை தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம் கரையில் இருந்து 30 கி.மீட்டர் துாரத்தில் வந்த போது கடலில், பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் மீனவர்களின் படகு, திடீரென ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 10 மீனவர்களும் கடலில் மூழ்கினர்.
செந்தில்வேல், காளிதாஸ், ஆகிய இருவரும் படகிலிருந்த மிதவை மற்றும் டயரின் உதவியுடன் உயிர் தப்பி, மல்லிப்பட்டினம் மீன்படி துறைமுகத்துக்கு வந்தனர். அங்கிருந்த மீனவர்கள் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக மல்லிபட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தமிழிசை சவுந்தரராஜன்: தெலங்கானா ஆளுநராக பதவியேற்க ரெடி; அதுல தமிழிசைக்கு இப்படியொரு சிக்கல்!
மாயமான மற்ற 8 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் அவர்களை தேடும் பணியில், கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, மல்லிப்பட்டினம் அருகே நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த முனீஸ்வரன், ரஞ்சித் குமார், சரக்குடியான், முனியசாமி ஆகிய 4 மீனவர்கள் தீவிர தேடுதலுக்கு பின் உயிருடன் மீட்டனர். மேலும் மாயமான 4 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்திய பெண்ணும், பாக்., பெண்ணும் அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கை திருமணம் - வைரலாகும் புகைப்படங்கள்...!
கடலில் மூழ்கி இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியதால், மீனவர்களின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.